search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தூக்கிட்டு தற்கொலை"

    • கோபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வைரா பாளையம் கந்தசாமி வீதியை சேர்ந்தவர் கோபால் (35). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சந்தியா என்ற மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக கோபால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    கோபால் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோகனப் பிரியா கோபாலை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதில் மனவேதனை அடைந்த கோபால் ஓயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த கோகுல்ராஜ் வீட்டின் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த நல்லாந்தொழுவு டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (26). கோவையில் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் கோகுல்ராஜின் தாய் லதா, கோகுல்ராஜை வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    இதில் மனவேதனை அடைந்த கோகுல்ராஜ் வீட்டின் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் தகவல் அறிந்து கோகுல்ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய் இறந்த சோகத்தில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் கிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர். சதீஷ்குமார் (வயது 23) இவர் மாந்தோப்புகளை குத்தகை எடுத்து பழங்களை விற்பனை செய்து வந்தார்.

    இவரது தாயார் இந்திராணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சதீஷ்குமார் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்த சதீஷ்குமார் தனது தாயார் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் வழக்கம் போல கதவை தட்டிய போது திறக்காததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது தூக்கில் தொங்கி கிடந்த சதீஷ்குமாரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×